செய்திகள்

கர்நாடகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - ஆளும் கூட்டணி தொடருமா?

Published On 2018-08-02 12:19 GMT   |   Update On 2018-08-02 12:19 GMT
கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #KarnatakaCivicPoll
பெங்களூரு:

கர்நாடகம் மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தன்னை விட குறைவான இடங்களை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளித்தது. 

இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கர்நாடகம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  

29 மாநகராட்சிகள், 53 நகராட்சிகள் மற்றும் 23 நகர பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட 105 இடங்களுக்கு முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 36 லட்ச்ம வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் தற்போதுள்ள ஆட்சியில் இடம் பிடித்துள்ள கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்கும் நோடா பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KarnatakaCivicPoll
Tags:    

Similar News