செய்திகள்
ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #MonsoonSession #OBC
புதுடெல்லி:
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். ஆனால், இதுதொடர்பான மசோதாவுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.
இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 406 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். #Parliment #Loksabha #OBC