செய்திகள்

ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு - ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-07-25 20:29 GMT   |   Update On 2018-07-26 09:48 GMT
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #President #RamNathKovind #Modi
புதுடெல்லி:

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   #President #RamNathKovind #Modi
Tags:    

Similar News