செய்திகள்
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அங்கீகரிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்
நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். #PrakashJavadekar #TeacherTrainingInstitution
புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) சட்டப்படி அங்கீகாரம் பெறாதபோதிலும், கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி படிப்புகளை வழங்கி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதாவால், இதுபோன்ற 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பலன் அடையும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர் எம்.உதயகுமார், மசோதாவை ஆதரித்து பேசினார்.
நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) சட்டப்படி அங்கீகாரம் பெறாதபோதிலும், கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி படிப்புகளை வழங்கி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதாவால், இதுபோன்ற 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பலன் அடையும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர் எம்.உதயகுமார், மசோதாவை ஆதரித்து பேசினார்.