செய்திகள்

பணி நியமனங்களை நிறுத்தி வையுங்கள் - அனைத்து பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

Published On 2018-07-19 09:21 GMT   |   Update On 2018-07-19 09:21 GMT
பணி நியமனங்களை நிறுத்தி வையுங்கள் - அனைத்து பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
புதுடெல்லி:

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை எந்த பணி நியமனமும் நடத்த கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. #UGC 

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பணி நியமனங்களையும் நிறுத்தி வைக்க நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News