செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

Published On 2018-07-15 03:24 GMT   |   Update On 2018-07-15 03:24 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
Tags:    

Similar News