செய்திகள்
வரதட்சணை கொடுமை: வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்தி பெண் சித்ரவதை
குஜராத் மாநிலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.
இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.
அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.
இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.
அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.