செய்திகள்
சத்தீஸ்கரில் நக்சலைட் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown