செய்திகள்

நாசிக்கில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது- பைலட்டுகள் உயிர்தப்பினர்

Published On 2018-06-27 07:48 GMT   |   Update On 2018-06-27 07:48 GMT
நாசிக்கில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் ரக விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
மும்பை :
 
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானிகள் அவசரகால வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.

நாசிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த சுகோய் ரக விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. சோதனைகளின் முடிவில் இந்திய விமானப்படையில் விமானத்தை சேர்க்க திட்டமிடப்படிருந்தது.

இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News