செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நோயாளியின் கிட்னி திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல்

Published On 2018-06-24 08:02 GMT   |   Update On 2018-06-24 08:02 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால் என்ற 60 வயது முதியவரின் கிட்னியை மருத்துவர் விபு கார்க் திருடியுள்ளார்.

இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறையினர், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டள்ளதாக சிறப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News