செய்திகள்

கவர்னரிடம் காஷ்மீர் அரசை ஒப்படைக்க சரியான நேரம்- கூட்டணி முறிவு குறித்து பாஜக விளக்கம்

Published On 2018-06-19 10:03 GMT   |   Update On 2018-06-19 10:03 GMT
ஜம்மு காஷ்மீரில் பிடிபி உடனான உறவை முறித்துள்ள பாஜக, கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை எடுத்துக் கூறியுள்ளது. #BJPDumpsPDP
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம், வன்முறை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அங்கு ஆபத்தில் உள்ளது. சமீபத்தில், பத்திரிகை ஆசிரியர் புகாரி கொல்லப்பட்டது அதற்கு எடுத்துக்காட்டான ஒன்று. காஷ்மீருக்காக மத்திய அரசு அனைத்தையும் செய்தது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றோம். ஆனால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிபி முயற்சிக்கவில்லை.

ஜம்மு லடாக் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


முப்தி முகம்மது சயீத் உடன் மோடி

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருதியும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒன்றினைந்த பகுதிதான் என்பதை நிலைநாட்டவும், அங்குள்ள நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு அதிகாரத்தை கவர்னரிடம் ஒப்படைக்க பாஜக தீர்மானித்துள்ளது.

கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் எங்களது நடவடிக்கை தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News