செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

Published On 2018-06-17 19:36 GMT   |   Update On 2018-06-17 19:36 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்பு அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் அவர் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தின்போது திருப்பதி பா.ஜ.க. பிரமுகர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 
Tags:    

Similar News