செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். #Modi #ChandrashekarRao
புதுடெல்லி:
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், நாட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத மாற்றி அணி உருவாக வேண்டும். அரசியலில் தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்று அணிக்கு தலைமை ஏற்க தான் தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.
நல்லதொரு தரமான மாற்றத்துடன் தேசிய அரசியலில் தான் பங்கேற்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததில் நாட்டுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அப்போது தனி உயர்நீதிமன்றம், ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. #Modi #TelanganaCM #ChandrashekarRao