செய்திகள்
டெல்லியை இன்று மாலை தாக்கிய திடீர் புழுதிப் புயல்
வெயிலின் தாக்கத்தால் வியர்த்து, விறுவிறுத்து விழிபிதுங்கி திண்டாடிய டெல்லி மக்கள் இன்று மாலை திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வீசிய புழுதிப் புயலால் அதிர்ச்சி அடைந்தனர். #DuststormhitDelhi
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.
மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. #DuststormhitDelhi