search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strong winds"

    • திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியது.
    • விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்நேற்று இரவு பலத்த காற்று வீசியது. திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியில் பல ஆண்டுகளாகஅரசுக்கு சொந்தமான பட்டுப்போன புளிய மரம் உள்ளது.இந்த புளிய மரத்தை அகற்றக்கோரி பல மாதங்களாக அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவலகம் மற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    ேநற்று திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியபோது கிடங்கல் - 1 ல் இருந்த பட்டுப்போன புளியமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. அந்த மரம் அருகில் உள்ளமின் கம்பத்தின் மீதும் அருகே இருந்த பாலகுரு என்பவருக்கு சொந்தமானமினி லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை மேல் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தது.மேலும் மின்கம்பம் மீது சாய்ந்ததால் அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

    இந்த விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் 29 -வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனி டம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த வருவாய் துறை மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வெயிலின் தாக்கத்தால் வியர்த்து, விறுவிறுத்து விழிபிதுங்கி திண்டாடிய டெல்லி மக்கள் இன்று மாலை திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வீசிய புழுதிப் புயலால் அதிர்ச்சி அடைந்தனர். #DuststormhitDelhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

    மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

    குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. #DuststormhitDelhi 
    கடலில் பலத்த காற்று வீசியதால் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்கள் தத்தளித்தனர். இதையடுத்து அவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாதவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ், பிரதீப், பால்ராஜ் ஆகிய 4 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் இருந்து 17 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் எதிர்பாராதவிதமாக படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்த மாதவன் உள்பட 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். பின்னர் காப்பற்றுங்கள்.... காப்பற்றுங்கள்.... என கூச்சலிட்டனர். இதைக்கண்ட அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேரையும் மீட்டு தங்களது நாட்டுப்படகில் ஏற்றினர். பின்னர் இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கரையில் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் 4 பேரும் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்ததால் அதில் இருந்த வலை, மீன்பிடி உபகரணங்கள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் தமிழக அரசு சேதமடைந்த பொருட்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×