செய்திகள்

பீகாரில் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக விருந்து - முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்பு

Published On 2018-06-07 22:24 GMT   |   Update On 2018-06-07 22:24 GMT
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அளித்த விருந்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார். #Bihar #NDALeaders #CMNitishKumar
பாட்னா:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அரசின் சாதனைகளை மக்களிடமும், முக்கிய பிரபலங்களிடமும் பாஜகவினர் விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்,, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், ராதா மோகன் சிங் மற்றும் துணை முதல் மந்தி சுஷில் குமார் மோடி, மாநில பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
 
அடுத்த ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என முவுவானது.#Bihar #NDALeaders #CMNitishKumar
Tags:    

Similar News