செய்திகள்

விமான நிலையங்களில் உள்ள கடைகளில் சர்வதேச பயணிகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்

Published On 2018-06-04 03:11 IST   |   Update On 2018-06-04 03:11:00 IST
விமான நிலையங்களில் உள்ள கடைகளில் சர்வதேச பயணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து மத்திய அரசு தனது விளக்கத்தை தெரிவித்துள்ளது. #GST
புதுடெல்லி:

விமான நிலையங்களில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும் என்று ஏ.ஏ.ஆர். எனப்படும் ஆணையத்தின் டெல்லி கிளை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, விளக்கம் கேட்டு வருவாய்த்துறைக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “வரிவிலக்கு பெற்ற கடைகள், ஜி.எஸ்.டி. வசூலிக்காது. அந்த கடைகள், தங்களிடம் பொருட்கள் வாங்கும் சர்வதேச பயணிகளிடம் அவர்களது பாஸ்போர்ட் நகலை மட்டும் கேட்டுப்பெற வேண்டும். அதை ஆதாரமாக வைத்து, மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. வரித்தொகையை திரும்பப்பெறலாம். இதுகுறித்த விளக்கத்தை விரைவில் வெளியிடுவோம்“ என்றார்.  #GST #tamilnews 
Tags:    

Similar News