செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தினால் நஷ்டம் அவர்களுக்கே - அரியானா முதல்வர் சர்ச்சை கருத்து

Published On 2018-06-02 05:28 GMT   |   Update On 2018-06-02 05:40 GMT
அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் அறிவித்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விளை பொருட்களை விற்காவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என அரியானா முதல்வர் தெரிவித்துள்ளார். #farmersstrike #kisanakvash
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளின் அவல நிலையை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் அம்மாநில விவசாயிகள் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை அரியானா மாநில விவசாயிகள் கையில் எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கிசான் அக்வாஷ் என்ற பெயரில் அரியானா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

மேலும் அரியானா மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும், போராட்டத்தின் இறுதி நாளான ஜூலை 10-ம் நாள் பேரணி நடத்தப்படும் எனவும் அம்மாநில விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு இங்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரித்தார்.

மேலும், விளை பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பதால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்றும் முதல்மந்திரி மனோகர் லால் கத்தாரி கூறியுள்ளார். மாநில முதல் மந்திரியின் இந்த சர்ச்சை கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 800 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #farmersstrike #kisanakvash
Tags:    

Similar News