செய்திகள்
சித்தூர் அருகே பெண் வக்கீல் கத்தியால் குத்திக் கொலை
சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை:
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews