செய்திகள்

மகாராஷ்டிர வேளாண் மந்திரி மாரடைப்பால் மரணம்

Published On 2018-05-31 09:15 IST   |   Update On 2018-05-31 09:15:00 IST
மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் மந்திரி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். #MHministerpassedaway #PandurangPundalikFundkar
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் வேளாண் மந்திரியுமான பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் உயிரிழந்தார். 67 வயதான இவர் தற்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் வேளாண் மந்திரியாக பதவி வகிக்கிறார்.

இவர், அகோலா மக்களவை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர் என்பதும், பா.ஜ.க.வின் மகாராஷ்டிரா மாநில தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #MHministerpassedaway #PandurangPundalikFundkar
Tags:    

Similar News