செய்திகள்

கைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

Published On 2018-05-27 22:38 GMT   |   Update On 2018-05-27 22:38 GMT
உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. #KairanaBypoll #Electioncommision
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.  

இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே , உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளது.

இன்று தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
Tags:    

Similar News