வழிபாடு
null
மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் 18-ந்தேதி வெளியீடு: தேவஸ்தானம் தகவல்
- ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
- திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் இந்தச் சேவைகளுக்கான மின்னணு குலுக்கல் முறைக்கு (இ-டிப்) 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே சமயம் திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.