செய்திகள்

பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது - மாயாவதி கருத்து

Published On 2018-05-19 15:06 GMT   |   Update On 2018-05-19 15:06 GMT
அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார். #Mayawati #karnatakapolitical #supremecourt
புதுடெல்லி:

கர்நாடக மாநில அரசியலில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதைவிட, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.  #Mayawati #karnatakapolitical #supremecourt
Tags:    

Similar News