செய்திகள்

அரபிக்கடலில் சாகர் புயல்- தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Published On 2018-05-19 04:58 GMT   |   Update On 2018-05-19 04:58 GMT
சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
Tags:    

Similar News