செய்திகள்

குதிரை பேரத்துக்கு வசதியாக 15 நாள் அவகாசம்- குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2018-05-17 05:51 GMT   |   Update On 2018-05-17 05:51 GMT
குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
பெங்களூர்:

கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
Tags:    

Similar News