செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

Published On 2018-05-15 02:52 GMT   |   Update On 2018-05-15 02:52 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #CeaseFireViolation #BSF #SambaSector
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்கியது. துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை காவலர் தேவேந்திர குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News