செய்திகள்

வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

Published On 2018-05-11 15:21 GMT   |   Update On 2018-05-11 15:21 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் கோவிலுக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Samajwadi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருப்பவர் சாஹ்னி. வழக்கமான அங்குள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் இன்று சென்று கொண்டிருந்த சாஹ்னியை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றது.

இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Samajwadi
Tags:    

Similar News