இந்தியா

சத்தீஸ்கரில் காவல் நிலையத்தில் 16 நக்சலைட்டுகள் சரண்

Published On 2025-09-11 14:43 IST   |   Update On 2025-09-11 14:43:00 IST
  • மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News