இந்தியா

அமெரிக்காவில் இருந்து இதுவரை 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல் - வெளியுறவு அமைச்சகம் தகவல்

Published On 2025-05-30 07:27 IST   |   Update On 2025-05-30 07:27:00 IST
  • இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
  • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு ராணுவ விமானத்தில் நாடுகடத்தப்பட்டது மத்திய அரசின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.

சட்டவிரோத வகையில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இந்திய குடிமக்களை நாடு கடத்தும் விஷயத்தில், அவர்களை பற்றிய விவரங்களை பெற்றதும், நாங்கள் அவர்களை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்து கொள்கிறோம்.

ஜனவரி 2025-ல் இருந்து, 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News