இந்தியா

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்

Published On 2024-03-15 02:53 GMT   |   Update On 2024-03-15 02:53 GMT
  • கல்வி உதவித்தொகை தொடர்பாக உதவி கேட்க சென்றபோது சம்பவம் நடைபெற்றதாக சிறுமியின் தாய் புகார்.
  • பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாஷிவநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

17 வயது சிறுமியின் தாயாரின் புகார் அடிப்படையில் பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News