செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இதனால் தான் இந்திய வீரர்கள் மயக்கமுற்றனர் - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2021-08-31 08:23 GMT   |   Update On 2021-08-31 08:23 GMT
இந்திய ராணுவ வீரர்கள் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கொரோனாவைரஸ் பெருந்தொற்று துவங்கியது முதல், உலகம் முழுக்க அதுபற்றிய போலி செய்திகள் பரவலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் மயக்கமுற்றதாக கூறி வீடியோ ஒன்று வைரலானது. 

வைரல் வீடியோ அடங்கிய பதிவுகளில், 'தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராணுவ வீரர்கள் ஓட்ட பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். இவ்வாறு செய்த போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?' என குறிப்பிடப்பட்டு இருந்தது. 



இதுபற்றிய இணைய தேடல்களில், மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை பதிவு காணக்கிடைத்தது. அந்த பதிவில், வைரல் வீடியோவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அதீத வெப்பம் காரணமாக மயக்கமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் வீரர்கள் மயக்கமுற்றனர் என கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News