செய்திகள்
பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார்.
பெரம்பலூர்:
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,14,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 1,73,953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,14,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 1,73,953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.