செய்திகள்

இந்து தீவிரவாதி விமர்சனம் - அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Published On 2019-05-14 14:02 GMT   |   Update On 2019-05-15 06:29 GMT
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட கமல் மீது அரவக்குறிச்சியில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார்.



இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு இன்று கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

இதை தொடர்ந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று இரவு இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கமல்ஹாசன் மீது 153A, 295A ஆகிய 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News