செய்திகள்

அரியலூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

Published On 2019-04-20 16:01 IST   |   Update On 2019-04-20 16:33:00 IST
தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #Ponparappi #pmk

அரியலூர்:

தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.

தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.

பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk

Tags:    

Similar News