செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

Published On 2019-04-20 08:11 GMT   |   Update On 2019-04-20 08:11 GMT
4 தொகுதி இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #TNAssemblyElection #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ‘மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

மே 1, 2-ந் தேதி:- ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி.

3, 4-ந் தேதி:- திருப்பரங்குன்றம் தொகுதி.

5, 6-ந் தேதி:- சூலூர் தொகுதி.

7, 8-ந் தேதி:- அரவக்குறிச்சி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #TNAssemblyElection #MKStalin

Tags:    

Similar News