செய்திகள்
39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #ministersellurraju
மதுரை:
மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்திரை திருவிழா காலத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலை பொறுத்தவரை மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு மக்களை சந்தித்தோம்.
தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த அரசுகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
எனவே மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju