Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 டிசம்பர் 2025: வைகுண்ட ஏகாதசி
- ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி நள்ளிரவு 1.34 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 1.03 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் முத்தங்கி சேவை. சகல விஷ்ணு ஆலயங்களில் இராப்பத்து உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநாரையூர் சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-ஆசை
மிதுனம்-கடமை
கடகம்-சுகம்
சிம்மம்-அன்பு
கன்னி-சுபம்
துலாம்- களிப்பு
விருச்சிகம்-வரவு
தனுசு- நட்பு
மகரம்-தாமதம்
கும்பம்-இன்பம்
மீனம்-உவகை