செய்திகள்

சோழிங்கநல்லூரில் குடிநீர்-பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவோம்- தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

Published On 2019-04-12 15:40 IST   |   Update On 2019-04-12 15:40:00 IST
சோழிங்கநல்லூரில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். #Loksabhaelections2019 #ThamizhachiThangapandian
சென்னை:

தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் மேடவாக்கம் ஏரிக்கரை தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணியை சேர்ந்த தீனன், ஜே.சி.பி. இயந்திரத்தில் பூக்களை நிரப்பி தமிழச்சி மீது பூக்களை கொட்டினார். ஆயில் மில் பகுதிக்கு வந்த போது, தமிழச்சி தங்க பாண்டியன் பிரசார வேனில் இருந்து இறங்கி அங்கு சாலையோரத்தில் இருந்த டீக்கடைக்கு உடன்பிறப்புகளோடு சென்று டீ குடித்தார்.

அப்போது அங்கிருந்த மக்களிடம் “இந்தப் பகுதி சென்னை மாநகராட்சியில் இணைந்தும் குடிநீர் வசதி இல்லை. பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை. கழிவு நீர் செல்ல குழாய்கள் பதிக்கவில்லை. இதற்கு காரணம், உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கிறது. விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும். உங்களுக்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து தருவோம்” என்றார் தமிழச்சி.

பிரசாரத்தின் போது மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டச் செயலாளர் திவாகர், மகளிர் அணி சசிகலா, கெளசல்யா, சந்திரா, 169-வது வட்டத்தை சேர்ந்த சங்கர், குமாரசாமி, விநாயகம், லீலாவதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், பகத்சிங், ஆர்.வி. குமார், ஆர் கே முத்துராஜ். அனுக்கிரஹா கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிர சாரத்தில் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #ThamizhachiThangapandian
Tags:    

Similar News