செய்திகள்

பா.ம.க. வேட்பாளர் வைதியலிங்கத்தை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

Published On 2019-04-03 09:32 GMT   |   Update On 2019-04-03 09:32 GMT
எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது என்று பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
தாம்பரம்:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போரூர், ஸ்ரீபெருமந்தூர், பல்லாவரம், கீழ்கட்டளை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. ஸ்ரீபெருமந்தூரில் மூடிய அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் வெங்கட்ராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வெங்கடேசன் ஐ.நா.கண்ணன், மாவட்ட செயலாளர் வினாயகம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பா.ஜனதா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேத சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தாம்பரம் மணி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பல்லாவரம் நகரமன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகரன், விஸ்வநாதன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் சந்திரசேகர், ராஜா, வேல் விழி, ஞானசேகரன், பழனி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

Tags:    

Similar News