தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சம்பளம் பெறும் பினாமிகளாக உள்ளனர்- மு.க.அழகிரி பேச்சு
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் எம்.எல்ராஜ் மகள் லிபியா-சந்தோஷ் குமார் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில், மு.க. அழகிரி பேசியதாவது:-
எம்.எல்ராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வந்துள்ளேன். என்னை போல் பலரும் வாழ்த்த வந்துள்ளனர்.
கட்சியில் பகுதி செயலாளர் துணைச் செயலாளர், இளைஞர் அணி, மாவட்ட துணைச் செயலாளர் என பல பொறுப்புகளுக்கு படிப்படியாக வந்தவர் எம்.எல்ராஜ். கலைஞர் உடன் பிறப்புகளை அப்படித்தான் வைத்திருந்தார்.
தற்போது தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்கும் பினாமிகளாக உள்ளனர். வெளியில் உள்ளவர்கள் அவர்களை கட்டுப்படுத்துகின்றனர். தற்போது கட்சி அப்படித் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமண விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கவுஸ்பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #mkalagiri #dmk #mkstalin