செய்திகள்

பாராளுமன்றத் தேர்தல்- தமிழகத்தில் 932 மனுக்கள் ஏற்பு

Published On 2019-03-28 07:50 GMT   |   Update On 2019-03-28 07:50 GMT
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 932 மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. #LokSabhaElections2019 #NominationAccepted
சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 305 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 43 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நீலகிரியில் குறைந்தபட்சமாக 10 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.



தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 27ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.50.20 கோடி பணம், 223 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பு மனுக்களை திரும்ப பெற நினைப்பவர்கள் இன்றும் நாளையும் மனுக்களை திரும்ப பெறலாம். நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். #LokSabhaElections2019 #NominationAccepted
Tags:    

Similar News