செய்திகள்
கந்தன் சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். #LSPolls #edappadipalaniswami
சென்னை:
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் இன்று காலை திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அம்மா அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஏழை மக்களின் நலன் காக்க தொடர்ந்து அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இத்தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் ஜெயவர்தன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.’
இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ADMK #edappadipalaniswami
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் இன்று காலை திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அம்மா அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஏழை மக்களின் நலன் காக்க தொடர்ந்து அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இத்தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் ஜெயவர்தன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.’
இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ADMK #edappadipalaniswami