செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணிக்கு தீபா ஆதரவு

Published On 2019-03-22 11:20 GMT   |   Update On 2019-03-22 11:20 GMT
பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-


மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அ.தி.மு.க. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.  
அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.  அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.   #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls #Deepa
Tags:    

Similar News