செய்திகள்

அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்

Published On 2019-03-22 08:14 GMT   |   Update On 2019-03-22 10:26 GMT
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். #TTVDhinakaran #AMMK
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

இதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும்.

விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.



நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும்.

ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய  வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும்.

இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

கோவை, திருச்சி, மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TTVDhinakaran #AMMK
Tags:    

Similar News