செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு தொகுதியில் மதிமுக தனி சின்னத்தில் போட்டி- வைகோ

Published On 2019-03-21 07:21 GMT   |   Update On 2019-03-21 07:49 GMT
ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #MDMK #Vaiko
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
Tags:    

Similar News