பலியான வாலிபரையும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.
நெல்லை அருகே இன்று காலை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- அரவிந்த் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அரவிந்த் (வயது 21).
மரத்தில் மோதி பலி
இவர் கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அரவிந்த் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள தனியார் மாவு மில் அருகே உள்ள சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.