உள்ளூர் செய்திகள்

தாழம்பூர் அருகே பீர்பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை

Published On 2023-07-06 06:51 GMT   |   Update On 2023-07-06 06:51 GMT
  • பிரவீன் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.
  • நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

திருப்போரூர்:

தாழம்பூர் அருகே உள்ள மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் லோகநாதன் என்கிற பிரவீன் (வயது20). இவர் இன்று காலை தாழம்பூர் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.

நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் இருந்தார். மேலும் அவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன.

ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவருடன் கடைசியாக சென்ற நண்பர்கள் குறித்தும் போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News