உள்ளூர் செய்திகள்

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2023-03-27 09:24 GMT   |   Update On 2023-03-27 09:24 GMT
  • மன்னார்குடி பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
  • அறுந்து கிடந்த மின்கம்பியை மாதவன் மதித்துள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 27).

நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.

அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News