உள்ளூர் செய்திகள்

கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது

Published On 2023-10-11 13:08 IST   |   Update On 2023-10-11 13:08:00 IST
  • கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கோவில்களில் உண்டியல் உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், டி.எஸ்.பி.ரூபன்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர், கொண்டசமுத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடியது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சேத்தியா த்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி.ரூபன்குமாரின் தனிப்படை போலீசார் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாபு, கோபி, ஏட்டுகள் மணிகண்டன், சங்கர், ரஜினி, விஜயகுமார், புகழ் ஆகிய குழுவினர் அடங்கிய போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணி ராஜா (37) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வட்டத்தூர், கொண்ட சமுத்திரம், பாளையங்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நகைகள், உண்டியலை உடைத்து பணம் திருடியதாக அவர் ஒப்புகொண்டார். அவரிடமிருந்து ரூ.8லட்சம் மதிப்புள்ள 15½ பவுன் கோவில் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் கண்மணி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News