உள்ளூர் செய்திகள்

பாளையில் காவலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

Published On 2023-03-29 14:44 IST   |   Update On 2023-03-29 14:44:00 IST
  • பேச்சிமுத்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
  • மாடசாமி என்பவர் பேச்சிமுத்துவை மிரட்டி செல்போனை பறித்து சென்றார்.

நெல்லை:

சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது65). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பணியில் இருந்த பேச்சிமுத்துவிடம் நாலாட்டின்புதூரை சேர்ந்த மாடசாமி (33) என்பவர் மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார். 

Tags:    

Similar News